விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை விரல் நெருப்பு, ஆள்காட்டி விரல் காற்று, நடுவிரல் ஆகாயம், மோதிர விரல் நிலம், சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன.
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை:
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வர்.
![Image result for தியான முத்திரை:](http://swasthiktv.com/wp-content/uploads/2016/03/179.jpg)
இதே நிலையில் இருபது நிமிடம் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, பதற்றம் ஆகியவை அகலும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை:
மூட்டுவலி, ரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்து கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி, தியான நிலையில் அமரவும்.
காது நன்கு கேட்க:
காதில் வலி எனில், நாற்பது நிமிடங்கள் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி, அழுத்திக் கொண்டு உட்காரவும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை: மனப்பதற்றம், உடலும் உள்ளமும் சோர்ந்து போவதை தடுக்க, நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்கவும் பிருதிவி முத்திரை பயன்படும்.
மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்தால், தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக்கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன் இம்முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான நாளாக அமையும்.
ரத்தம் சுத்தமாக வருண் முத்திரை:
ரத்தம் சுத்தமாக, தோல் நோய்கள், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
![Image result for லிங் முத்திரை:](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJqw31ZRn1kmq9LyHgDodMvUPSPTZoQ0WmlbVNUk2gpVQ_Mwlw6DTbg424xDO3GICX3W0szZ8EUFgNmsIeT0BHY4JAFFeofkRcPpXM0rEEen0l6MM8zQvdD0b1yLioQZwNz66x4VonoHA/s400/Varuna+Muthirai.jpg)
வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றல் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாக்கும்.
கொழுப்பு கரைய சூரிய முத்திரை:
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும்.
![Image result for தியான முத்திரை:](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk-SUCKZBMtAB63ozF0BYxK3rHoctlvsA_1SH02Ii8LKwg6XK09ZMUOTUu2rbiTh3SjzSMM2qdvbJoEqJWtBY-j6ZkRTI3aBkocdvG-Qm68eb0xzoId7bkRHpIg3lG34EBElhz5nc_M1Ry/s400/44.jpg)
மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
பிராண முத்திரை:
உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும்.
சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல், மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை:
2 உள்ளங்கைகளையும் விரல்களையும் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக்கை பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும்.
![Image result for லிங் முத்திரை:](http://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2017/01/meditation007/img/625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg)
பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.05.2017